சிவபெருமான், எளியவர்க்கும் அருளும் கருணை உள்ளம் கொண்டவர். ஆனாலும்,
சிவபெருமானின் திருவருளைப் பெற விரும்பும் அன்பர்கள், சிவபெருமானுக்கு
பலவகையான அபிஷேகத் திரவியங்களால் அபிஷேகம்செய்து வழிபடுகின்றனர். இதன்
பலனாக சிவபெருமானின் பேரருளுக்குப் பாத்திரராகி, பல
நன்மைகளைப்பெறுகின்றனர்.
சிவபெருமானுக்கு உகந்த அபிஷேகத் திரவியங்களும் கிடைக்கும் பலன்களும்:
1.வலம்புரிச் சங்கு அபிஷேகம்:
சிவபெருமானுக்கு மிகவும் உவப்பானது வலம்புரிச் சங்கினால் செய்யப்பெறும் அபிஷேகம். வலம்புரிச் சங்கில் மகாலட்சுமியும் குபேரனும் வாசம் செய்வதாக ஐதீகம். வலம்புரிச் சங்கினால் அபிஷேகம் செய்தால், சகல ஐஸ்வர்யங்களும் கிடைப்பதுடன், தீவினைகள் நீங்கி, நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும்.
2.விபூதி அபிஷேகம்:
விபூதியால் அபிஷேகம் செய்தால், இன்ப வாழ்க்கையும் மோட்சமும் கிடைக்கும்.
3.கரும்புச் சாறு:
கரும்புச் சாறினால் அபிஷேகம் செய்தால், நோய்நொடிகள் நீங்கி, ஆரோக்கிய வாழ்வைப் பெறலாம்.
4.எலுமிச்சம்பழச் சாறு:
எலுமிச்சம் பழச்சாறினால் அபிஷேகம் செய்தால், எதிரிகள் அச்சம் நீங்கி, பகைமைகள் விலகும்.
5.இளநீர்:
இளநீரால் அபிஷேகம் செய்தால், இன்பமான வாழ்வு கிடைக்கும்.
6.பஞ்சாமிர்தம்:
பழங்கள், தேன், கற்கண்டு ஆகியவை சேர்த்த பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால், உடலும் உள்ளமும் வலிமைபெறும்.
7.தேன்:
தேனால் அபிஷேகம் செய்தால், இசை வல்லமை கிடைக்கும்.
8.பால்:
பாலால் அபிஷேகம் செய்தால், நோய்நொடிகள் நீங்கும்; ஆரோக்கிய உடல் நலத்துடன் ஆயுள் நீடிக்கும்.
9.தயிர்:
9.தயிர்:
தயிரால் அபிஷேகம் செய்தால், நல்ல குழந்தைகளைப் பெறலாம்.
10.நெய்:
10.நெய்:
நெய்யால் அபிஷேகம் செய்தால், முக்தியைத் தரும்.
கோயிலாக இருந்தால், அர்ச்சகரிடம் கொடுத்து அபிஷேகம் செய்யச் சொல்லலாம். முறைப்படி வீட்டிலேயே சிவலிங்கம் வைத்து பூஜை செய்பவர்கள், அவரவர் விரும்பும் பலனுக்கு ஏற்ற அபிஷேகப் பொருள்களைக்கொண்டு அபிஷேகம் செய்யலாம்.
No comments:
Post a Comment