Tuesday, February 28, 2017

அக்குபிரஷர்



யாருக்காவது லேசான தலைசுற்றல் ஏற்பட்டாலே ரத்த அழுத்தம் பார்க்கிறோம். ஆனால் பழங்காலத்தில் கடவுள் முன்பாக, தரையில் உடல் உறுப்புகள் அனைத்தும் படும்படியாக விழுந்து கும்பிட்டு விட்டு எழுந்திருப்பார்கள். அப்படி எழுந்த பின்னர் சரியாக நிற்க முடிந்தால் உடலில் எந்த குறையும் இல்லை என்று அர்த்தம். கும்பிட்டு விட்டு எழுந்து நின்றவுடன் தடுமாற்றம் ஏற்பட்டால் ரத்த ஓட்டம் சரியான அளவில் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஞாபக சக்தியைத் தூண்டும் நரம்புகளில் முக்கியமானவை காதின் நரம்பு வழியே செல்கின்றன. அந்த இடத்தில் அழுத்தம் தருவதால் ஞாபக சக்தி தூண்டபடுகிறது. அதனால் தான் அந்த காலத்தில் ஆசிரியர்கள், மாணவர்களின் காதை பிடித்து அழுத்தினர்! முன்பெல்லாம் படிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு காதை பிடித்துக் கொண்டு பிள்ளையாருக்கு தோப்புக் கரணம் போடுவார்கள். இதுவும் நினைவாற்றலைத் தூண்டும்.

இரண்டு உள்ளங்கைகள் மற்றும் இரண்டு உள்ளங்கால்களிலும் அக்குபிரஷர் செய்து வந்தால் எந்த நோயும் வராது. வந்த நோய்களும் படிபடியாகக் குறைம். உடல் இளைப்பதற்கும் அக்குபிரஷர் சிகிச்சை செய்யலாம். உள்ளங்கால், உள்ளங்கையில் குறிபிட்ட இடத்தில் பத்து செகடுகள் அழுத்தினால் ஆறு மாதத்தில் பலன் தெரியும்.

உடல் இளைத்தாலும் அல்லது உடற்பயிற்சி, டயட்டை விட்டுவிட்டாலும் மீண்டும் எடை கூடி குண்டாகி விடுவோம். ஆனால் அக்குபிரஷர் சிகிச்சையில் உணவுக் கட்டுபாட்டுடன் இருந்தால் எடை கூடாது. உடல் இளைப்பதற்கு அக்குபிரஷர் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் காலங்களில் உடலுறவில் ஈடுபடக்கூடாது. அப்படி இருந்தால் கூடிய சீக்கிரமே நல்ல பலன் கிடைக்கும்.

14 முதல் 18 வயது வரை உள்ள பெண்கள் பலர் ஒற்றைத் தலைவலியால் அதிகமாக அவதிபடுகின்றனர். இந்த வயதில் அதிகமாக சுரக்கும் ஹார்மோன்களால் ஏற்படும் செக்ஸுவல் டென்ஷனால் இந்தத் தலைவலி ஏற்படுகிறது. சிலருக்கு சளியினால் முக்கடைபு ஏற்பட்டு அதனாலும் தலைவலி ஏற்படலாம். மலச்சிக்கல், மாதவிடாய் கோளாறுகளாலும் தலைவலி வரும். இவற்றை அக்குபிரஷர் முலம் குணபடுத்த முடியும்.

உச்சி முதல் பாதம் வரை மென்மையாக அக்குபிரஷர் செய்து கொண்டால் உடல் பருமன், தலைவலி, சைனஸ், ரத்தபோக்கு, வெள்ளைபடுதல், முட்டுவலி, முழங்கால் வலி, இடுப்பு வலி, முழங்கை வலி, உயர் ரத்த அழுத்தம் போன்ற பெரும்பாலான பிரச்சினைகளை அக்குபிரஷர் முலம் தீர்த்து வைக்க முடியும்.

இதற்கான தீர்வே கோவில் பிரகாரத்தில் பட்டியக்கல்லில் வலம் வருவது. அக்குபிரஷர்.

சிவனுக்கு உகந்த அபிஷேகப் பொருள்களும் அதன் பலன்களும்!

சிவபெருமான், எளியவர்க்கும் அருளும் கருணை உள்ளம் கொண்டவர். ஆனாலும், சிவபெருமானின் திருவருளைப் பெற விரும்பும் அன்பர்கள், சிவபெருமானுக்கு பலவகையான அபிஷேகத் திரவியங்களால் அபிஷேகம்செய்து வழிபடுகின்றனர். இதன் பலனாக சிவபெருமானின் பேரருளுக்குப் பாத்திரராகி, பல நன்மைகளைப்பெறுகின்றனர்.

             சிவனுக்கு பால் அபிஷேகம்

சிவபெருமானுக்கு உகந்த அபிஷேகத் திரவியங்களும் கிடைக்கும் பலன்களும்:

1.வலம்புரிச் சங்கு அபிஷேகம்:

              வலம்புரிச் சங்கு

சிவபெருமானுக்கு மிகவும் உவப்பானது வலம்புரிச் சங்கினால் செய்யப்பெறும் அபிஷேகம். வலம்புரிச் சங்கில் மகாலட்சுமியும் குபேரனும் வாசம் செய்வதாக ஐதீகம். வலம்புரிச் சங்கினால் அபிஷேகம் செய்தால், சகல ஐஸ்வர்யங்களும் கிடைப்பதுடன், தீவினைகள் நீங்கி, நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும்.

2.விபூதி அபிஷேகம்:
 
            விபூதி

விபூதியால் அபிஷேகம் செய்தால், இன்ப வாழ்க்கையும் மோட்சமும் கிடைக்கும்.

3.கரும்புச் சாறு:

             கரும்புச் சாறு

கரும்புச் சாறினால் அபிஷேகம் செய்தால், நோய்நொடிகள் நீங்கி, ஆரோக்கிய வாழ்வைப் பெறலாம்.

4.எலுமிச்சம்பழச் சாறு: 

           எலுமிச்சம் பழச் சாறு


எலுமிச்சம் பழச்சாறினால் அபிஷேகம் செய்தால்,  எதிரிகள் அச்சம் நீங்கி, பகைமைகள் விலகும்.

5.இளநீர்:


          இளநீர்

இளநீரால் அபிஷேகம் செய்தால், இன்பமான வாழ்வு கிடைக்கும்.

6.பஞ்சாமிர்தம்: 

        பஞ்சாமிர்தம்

பழங்கள், தேன், கற்கண்டு ஆகியவை சேர்த்த பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால், உடலும் உள்ளமும் வலிமைபெறும்.

 7.தேன்:
தேன்

தேனால் அபிஷேகம் செய்தால், இசை வல்லமை கிடைக்கும்.

8.பால்:

           பால்

பாலால் அபிஷேகம் செய்தால், நோய்நொடிகள் நீங்கும்; ஆரோக்கிய உடல் நலத்துடன் ஆயுள் நீடிக்கும்.

9.தயிர்:

            தயிர்

தயிரால் அபிஷேகம் செய்தால், நல்ல குழந்தைகளைப் பெறலாம்.

10.நெய்: 

              நெய்

நெய்யால் அபிஷேகம் செய்தால், முக்தியைத் தரும்.

கோயிலாக இருந்தால், அர்ச்சகரிடம் கொடுத்து அபிஷேகம் செய்யச் சொல்லலாம். முறைப்படி வீட்டிலேயே சிவலிங்கம் வைத்து பூஜை செய்பவர்கள், அவரவர் விரும்பும் பலனுக்கு ஏற்ற அபிஷேகப் பொருள்களைக்கொண்டு அபிஷேகம் செய்யலாம்.

விபத்தில்லா வாழ்வுக்கு அருள்புரியும் கோயில் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

விபத்துகளும், உயிர்ப்பலிகளும் பல குடும்பங்களை நிலைகுலையவைத்துவரும் வேளையில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே விபத்தில்லா வாழ்வுக்கு அருள்புரியும் கோயில் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள திருச்சிறுகுடி மங்களாம்பிகை சமேத, ஸ்ரீ சூட்சுமபுரீஸ்வரர் திருத்தலம்தான் அது. அம்பாள் தன் திருக்கரங்களால் மணலால் லிங்கம் அமைத்து, ஸ்ரீசிறுபிடியீசர், ஸ்ரீசூட்சுமபுரீஸ்வரர் என்ற திருநாமங்களோடு வழிபட்ட தலம் இது. இந்தத் தலத்து இறைவனை மங்களன் என்னும் செவ்வாய் வழிபட்டதால், இறைவனுக்கு ஶ்ரீமங்களநாதர் என்ற திருப்பெயரும் உண்டு. அதனால், இந்தக் கோயில், செவ்வாய் தோஷ நிவர்த்தித் தலமாகவும் திகழ்கின்றது.

             கோயில்

கோயில் உருவான வரலாறு 

திருக்கயிலாயத்தில் சிவனும், பார்வதியும் சொக்கட்டான் விளையாட, அதில் பார்வதி வெற்றிபெற்றுவிட்டாள். தோல்வியின் காரணமாக ஏற்பட்ட வெட்கத்தினால், சிவன் திடீரென எங்கோ மறைந்துவிட்டாராம். இதனால் மனக்கவலையடைந்த பார்வதி, ஈஸ்வரனைத் தேடியலைந்து, இந்த ஊருக்கு வந்து மங்கள தீர்த்தம் உண்டாக்கினார். அதில், ஒரு பிடி ஈரமணலை எடுத்து, சிவலிங்கமாகப் பிடித்து சிவனை வழிபட, சுவாமி பிரத்யட்சமாகி பார்வதியை மீண்டும் ஏற்றுக்கொண்டார்.  

கைப்பிடி மணலை எடுத்து சிவலிங்கம் உண்டாக்கியதால், இந்த ஊருக்கு ‘சிறுபிடி’ என்று பெயர். அது மருவி தற்போது, ‘சிறுகுடி’ என்று அழைக்கப்படுகிறது. மங்கள தீர்த்தம் உண்டாக்கியதால், மங்களாம்பிகை என்று அம்பிகை அழைக்கப்படுகிறாள். மணலால் பிடித்த லிங்கம் என்பதால்,  அபிஷேகம் செய்வதில்லை.  மாறாக புனுகு சாத்துவதே வழக்கமாக இருக்கிறது.
                                            திருஞானசம்பந்தர்

திருஞானசம்பந்தர் தமது 12-வது வயதில் பல்லக்கில் வந்து, இங்குள்ள சுவாமியை தரிசனம்செய்திருக்கிறார். அவர் வருகையை அறிந்த திருநாவுக்கரசர், ‘வயதில் சிறியவராக இருந்தாலும் அவருக்கு இறைவன் அருள் புரிந்திருக்கிறான். அவரை நாமும் தரிசிக்கவேண்டும்' என்று நினைத்தவர், திருஞானசம்பந்தரை தரிசித்ததுடன், அவருடைய பல்லக்கையும் சுமந்துவந்தார். அதை அறியாத திருஞானசம்பந்தர், ‘சிவனடியார் திருநாவுக்கரசரை சந்திக்க திருவிழிமழலைக்குச் செல்லுங்கள்’ என்று கட்டளையிடுகிறார். ‘அடியேன் இங்குதான் இருக்கிறேன்’ என்று திருநாவுக்கரசர் சொல்ல, அதிர்ந்துபோன திருஞானசம்பந்தர், கீழே இறங்கி ‘என்னை நீங்கள் சுமப்பதா?’ என்று கூறி காலில் விழுந்து வணங்கியிருக்கிறார்.  இந்த அரிய நிகழ்வு நடந்த தலம் இது என்பதால், கூடுதல் சிறப்பு என்கிறார்கள்.  

            திருத்தலம்

முத்துசுப்ரமணிய குருக்களைச் சந்தித்தபோது, “சோழர்காலத்தைச் சேர்ந்த பழமையான கோயில் இது. செவ்வாய் பகவான் வந்து வணங்கி விமோசனம் பெற்றதால், செவ்வாய் தோஷம் உள்ளவருக்கு நிவர்த்தி தரும் தலமாகவும் இருக்கு.  பெரும்பாலும் கடன்தொல்லை, பயம், தற்கொலை எண்ணம், சண்டை சச்சரவு, வாகன விபத்து, ரத்தம் சம்பந்தமான நோய்கள், மாரடைப்பு, தீயினால் ஏற்படும் காயங்கள் அனைத்தையும் நீக்கி, அருள்தரும் மங்களநாதராக சுவாமி இருக்கிறார்.  

 ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் 2-ல் இருந்தால் வாக்குவாதம், குடும்பத்தில் பிரிவு, 4-ல் இருந்தால்,  உடல் ஆரோக்கியம் பாதிப்பு, 7-ல் இருந்தால், கணவன் மனைவி பிரிவு, விபத்து, கண்டம், 8-ல்    இருந்தால், மாங்கல்ய தோஷம், அவமானம், 12-ல் இருந்தால் விரயம் போன்ற இன்னல்கள் ஏற்படும்.  இப்படி அனைத்து துன்பங்களில் இருந்தும் நம்மை செவ்வாய் பகவான் காப்பாற்றுகிறார்.

புதிதாக  வாகனம் வாங்குபவர்கள் விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்காக, இந்தக் கோயிலுக்கு வந்து  அர்ச்சனை செய்து செல்கிறார்கள். மேலும் புதிதாக வீடு கட்டுபவர்களும் தாங்கள் கட்டும் வீடு  மங்களகரமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, மங்களாம்பிகை ஏற்படுத்திய மங்கள  தீர்த்தத்தில் நீராடி, மங்களநாதரை வழிபட்டுச் செல்கின்றனர்.  

குழந்தை உருவில் கையில் பால் கிண்ணத்துடன், இடுப்பில் அரைஞாண்கயிற்றுடன் காட்சிதரும் திருஞானசம்பந்தர், இங்கு வீற்றிருக்கிறார். சுவாமி, அம்பாள், திருஞானசம்பந்தர் ஆகியோரை வழிபாடு செய்தால் குழந்தைப்பேறு உண்டாகும்.  செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடையிருந்தால் இங்கு வந்து வணங்க தடை அகலும்.  மேஷ, விருச்சிக ராசியில் பிறந்தவர்கள், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், அசுவினி, மகம், மூலம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அவசியம் வந்து வணங்கவேண்டிய கோயில் இது.  

      சிவ திருத்தலம்

ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசனம், மாசி மகம், பங்குனி உத்திரம் இங்கு விழாக்காலம். இது மிகவும் குக்கிராமம் என்பதால், இங்கு தரிசனம் செய்ய வருபவர்கள், தங்களுக்கு வேண்டிய அர்ச்சனைப் பொருட்களை வெளியிலிருந்து வாங்கி வருவது நலம்” என்றார்.  

கோயிலுக்கு எப்படிச் செல்வது?

கும்பகோணத்திலிருந்து பூந்தோட்டம் வழியாக திருவாரூர் செல்லும் பேருந்து மார்க்கத்தில், கடகம்பாடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கவேண்டும். அங்கிருந்து வடக்கே சுமார்  2 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. கடகம்பாடியில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.

பறவைகளைத் தொடர்ந்து பார்த்தால், மன அழுத்தம் குறையுமாம்! - ஆய்வில் தகவல்



எங்கெல்லாம் மனிதர்கள் பறவைகளுடன் அதிகம் பழகுகிறார்களோ... அதிகம் அவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் மன அழுத்தம் குறைவாக இருப்பதாக, ஓர்ஆய்வு முடிவு சொல்கிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த எக்ஸீடர் பல்கலைக்கழகம் சார்பாக 270 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. பறவைகளுடன் நேரம் செலவிடுபவர்கள், அவற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு பதற்றம், மனச்சோர்வு, மன அழுத்தம் போன்றவை குறைவாக இருப்பது உறுதியாகியுள்ளது.

பறவைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன, ஏன் மன அழுத்தம் குறைகிறது என்ற முழுக் காரணம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. எனினும், மனிதர்களின் முகத்திலேயே எப்போதும் விழிக்கும் நகர வாசிகளைவிட, இயற்கையோடு இயைந்து வாழ்பவர்களே நிம்மதியாக இருக்கிறார்கள் எனப் பேராசிரியர் டேனியல் காக்ஸ் கூறியிருக்கிறார் . 
 
இந்தச் செய்தியைப் படித்தவுடனே பறவைகள் இருக்கக்கூடிய படத்தை டவுண்லோடு செய்து பார்க்காதீர்கள் பாஸ், ஜன்னலைத் திறந்து நிஜப் பறவைகளைப் பாருங்கள், கவனியுங்கள், உணவளியுங்கள்.

கார்டுல பெட்ரோல் போட்டா இவ்வளவு லாபமா!?

உங்களுக்கு 'கிரெடிட் கார்டு’ வேண்டுமா? எனக் கேட்டு வீட்டுக்கே வந்து தரும் நிலைமை இருக்கிறது. ஆனால், இதனை யாரும் சரியாக பயன்படுத்துவதில்லை. கார்டை வாங்கிவிட்டு சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல் பலரும் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள். கிரெடிட் கார்டு மூலம் டெலிபோன் பில், எலக்ட்ரிசிட்டி பில், இன்ஷூரன்ஸ் பிரீமியம், சினிமா மற்றும் ரயில் டிக்கெட் புக்கிங் வசதி எனப் பல வசதிகள் மற்றும் சலுகைகள் இருக்கின்றன. இதில் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டுக்கான பிரத்யேக கார்டுகளும் உள்ளன.

பெட்ரோல், டீசலுக்காக கார்டு!
 
உதாரணத்துக்கு உங்களுடைய வாகனத்தில், நீங்கள் தினமும் அலுவலகத்துக்குச் சென்று வருகிறீர்கள்; வேலை நிமித்தமாகவோ அல்லது நண்பர்களுடனோ அடிக்கடி பயணம் செய்கிறீர்கள்; ஆண்டுக்குப் பல முறை சொந்த ஊருக்குச் சென்று வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

இதற்கான பயணத்தின்போது பெட்ரோல், டீசல் போடும் போது, பணத்துக்குப் பதில் கார்டாக பயன்படுத்தினால், கிரெடிட் கார்டு நிறுவனங்கள் ரிவார்டு பாயின்டுகள் என பலதரப்பட்ட சேவைகளை அளிக்கின்றன. வெவ்வேறு கார்டுகள் அளிக்கும் பல்வேறு வகையான சலுகைகளை அலசிப் பார்த்து, உங்களுக்கு எது பொருந்துமோ, எது அதிகப் பயனளிக்குமோ அதைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

ஆண்டுக் கட்டணம்!

இந்தியன் ஆயில் சிட்டி பிளாட்டினம், ஐசிஐசிஐ பேங்க் ஹெபிசிஎல், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மெம்பர்சிப் ரிவார்ட்ஸ், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் சூப்பர் வேல்யூ டைட்டானியம் என பல்வேறு கார்டுகள் சந்தையில் இருக்கின்றன. ஒவ்வொரு கிரெடிட் கார்டுக்கும் ஆண்டுக் கட்டணம் மாறுபடுகிறது. சில கார்டுகளில் ஆண்டுக் கட்டணம் குறைந்தபட்சம் 200 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை இருக்கின்றன. சில கார்டுகளில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் செலவு செய்தால் ஆண்டு கட்டணம் தள்ளுபடி என்ற சலுகைகளும் உண்டு.

Add On கார்டு!

முதன்மை கிரெடிட் கார்டு போலவே Add On கார்டும் சமமான முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. இதற்குக் காரணம், பிரதான கிரெடிட் கார்டில் செய்யப்படும் அனைத்துப் பரிவர்த்தனைகளையும் இந்தக் கார்டிலும் செய்யலாம். இதன் மூலம் ஒருவர் மட்டுமல்லாது, உங்கள் மனைவியோ அல்லது குழந்தையோ ஆட் ஆன் கார்டு மூலம் பயன்பெறலாம்.

சேவை வரி கிடையாது!

பெட்ரோல் பங்க்கில் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு இனி கட்டணம் கிடையாது என அரசு அறிவித்துள்ளது. டெபிட்/கிரெடிட் கார்டுகளை பெட்ரோல் பங்க்கில் பயன்படுத்தினால் பரிவர்த்தனை கட்டணம் கிடையாது என்பது நல்ல விஷயம். இதற்கு முன்னர் கிரெடிட் கார்டுகளுக்கான பரிவர்த்தனைக்கு 1.5 சதவீதம் வரை வரி வசூலிக்கப்பட்டது. இப்போது, பெட்ரோல் பங்க்கில் கார்டு பயன்படுத்தினால் கூடுதல் கட்டணம் என்பது ரொக்கமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக வரி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்காணிக்கலாம்!

கிரெடிட் கார்டு எங்கே, எப்படிப் பயன்படுத்தப்பட்டுள்ளது என உடனடி தகவல் கிடைத்து விடும் என்பதால், கார்டு மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளைச் சுலபமாகக் கண்காணிக்கலாம். ஒவ்வொரு முறையும் கிரெடிட் கார்டு உபயோகத்துக்குப் பின்னர் நீங்கள் என்ன செலவு செய்தீர்கள், எவ்வளவு செலவு செய்தீர்கள், எங்கு செலவு செய்தீர்கள் என்ற தகவலும் எஸ்எம்எஸ் ஆக வரும். இது அவ்வப்போது நம் செலவுகளைத் தொகுக்கவும் உதவும் என்பது கூடுதல் வசதி.

போனஸ் பாயின்ட்ஸ்!

உங்கள் கார்டை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் வெகுமதி புள்ளிகளைச் சில வங்கிகள் அளிக்கிறது. இது ஆட் ஆன் கார்டுகளுக்கும் பொருந்தும். உங்கள் கணக்கில் போதிய வெகுமதி புள்ளிகள் சேர்ந்தவுடன், அதனைப் பணமாகப் பெற்றுக் கொள்ளலாம். இந்த கார்டுகளைப் பெட்ரோல் பங்க்-ல் பயன்படுத்தினால், குறைந்தபட்சம் 2.5 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை போனஸ் புள்ளிகளாக கிடைக்கும்.

உதாரணத்துக்கு ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் செலவழித்தால் ரூ.5000 கேஷ்பேக் ஆக கிடைக்கும். இதில் ஒவ்வொரு நிறுவனங்களும் போனஸ் பாயின்ட், ரிவார்ட் பாயின்ட் என ஆஃபரை அள்ளித் தெளிக்கின்றன. அடிக்கடி பயணம் செய்பவர் அல்லது பயணம் செய்வதே தொழிலாக இருப்பவர்களுக்கு பெட்ரோல், டீசலை நிரப்ப பணத்துக்கு பதில் கார்டு பயன்படுத்துவது நிச்சயம் லாபம்தான்.

உதாரணத்துக்கு, ஒரு கால் டாக்சி டிரைவர் ஒரு நாளைக்கு குறைந்தது 20 முதல் 25 லிட்டர் வரை டீசல் நிரப்புகிறார். ஒரு லிட்டர் டீசல் விலை 60 ரூபாய். 25 லிட்டர் எனில் ஒரு நாளைக்கு 1,500 ரூபாய் செலவிடுகின்றனர். மாதம் 750 லிட்டர் எனில் 45,0000 ரூபாய் செலவிட வேண்டியுள்ளது. கிரெடிட் கார்டு பயன்படுத்தி 5% கேஷ்பேக் என்றால் மாதம் ரூ.2,250 மிச்சம். இதுவே 365 நாள், ஒரு ஆண்டுக்கு 9,125 லிட்டர் செலவிட வேண்டியுள்ளது.

இதனடிப்படையில் கணக்கீட்டுப் பார்த்தால் ஆண்டுக்கு ரூ.5,47,500க்கு டீசல் நிரப்ப வேண்டியுள்ளது. இதுவே கார்டாக பயன்படுத்தினால் ஆண்டுக்கு ரூ.27,375 வரை மிச்சப்படுத்தலாம். மாதக் கணக்கில் பார்க்கும்போது இது ஒரு சிறிய தொகையாக இருந்தாலும், அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு ஆண்டுக்கணக்கில் ஒரு பெரிய தொகை நிச்சயம் மிச்சமாகும்.

ஒட்டுமொத்தத்தில் பெட்ரோல், டீசல் போடும்போது ரொக்கத்துக்குப் பதில் கார்டாக பயன்படுத்துவதால் பல்வேறு வசதிகளும், சலுகைகளும் கிடைக்கிறது. அதேசமயம் கிரெடிட் கார்டை கவனமாகவும், எல்லை மீறாமலும் பயன்படுத்த வேண்டியது அவசியம். கிரெடிட் கார்டு அளவுக்கு மீறினால், நஞ்சாகிவிடும் என்பதை எப்போதும் மறந்துவிடாதீர்கள்.

Thursday, February 23, 2017

சிவராத்திரி



 
விரத மகிமையால்  இராமனைக்கண்ட குகன் (மஹா சிவராத்திரி சிறப்பு பதிவு)

 - சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், திருவாதிரை விரதம், சிவராத்திரி விரதம், கல்யாண விரதம், பாசுபத விரதம், அஷ்டமி விரதம், கேதார விரதம் என சிவ விரதங்கள் எட்டு வகைப்படும் என்று கந்த புராணத்தின் உபதேச காண்டம் கூறுகிறது. விரதங்கள் அனைத்திலும் மிகவும் மகிமை வாய்ந்தது சிவராத்திரி விரதமாகும். - 

இந்த சிவராத்திரியின் சிறப்பினை சிவபெருமானே விஷ்ணு பகவானுக்குக் கூறியதாக புராண வரலாறு கூறுகிறது. சிவராத்திரி விரத மகிமை குறித்துப் பல கதைகள் உள்ளன. அவற்றிலொரு சுவாரசியமான கதையைக் காண்போமா?. - 

மகா சிவராத்திரி தினத்தில் வியாதன் என்ற வேடன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். சிவராத்திரியைப் பற்றி அவனுக்குத் தெரியாது. நாள் முழுவதும் அலைந்தும் ஒரு மிருகமும் அவனுக்குக் கிடைக்கவில்லை. பசியால் வாடிக்கொண்டிருக்கும் தன் குடும்பத்தினரை எண்ணி நொந்தவாறு திரும்பிக்கொண்டிருந்த அவன், வழியிலிருந்த நீர்நிலையில் நீர் அருந்தினான். ஏதாவது மிருகம் அந்த நீர்நிலைக்கு வரும். - 

அதைக்கொன்று எடுத்துச்செல்லலாம் என்ற நம்பிக்கையுடன், சிறிது நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அருகிலிருந்த மரத்திலேறி உட்கார்ந்துகொண்டான். அது வில்வ மரம் என்பதும், அதன்கீழ் ஒரு சிவலிங்கம் இருப்பதும் அவனுக்குத் தெரியாது. வேடன் உறங்காமல் மிருகத்துக்காகக் காத்திருந்தான். அப்போது ஒரு பெண்மான் நீர்நிலைக்கு வந்தது. அது முதல் சாமம் முடிவடையும் நேரம். மானைக் கண்ட வேடன் அம்பை எடுத்து வில்லில் பூட்டினான். -

 அவனது அசைவினால் ஒரு வில்வ இலையும் சிறிது தண்ணீரும் மரத்தின் கீழிருந்த சிவலிங்கத்தின்மீது விழுந்தன. வேடன் தன்னை குறிபார்ப்பதை அறிந்த மான், "வேடனே, என் இளம் குட்டிகள் என்னை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும். தயவுசெய்து என்னைக் கொல்லாதே'' என்று வேண்டியது. -

"மானே, என் குடும்பத்தினரின் பசியைப் போக்கவேண்டியது எனது கடமை. உன்னைக் கொல்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை'' என்றான் வேடன். அதற்கு அந்தப் பெண்மான், "அப்படியென்றால் எனக்கு கொஞ்சம் அவகாசம் தாருங்கள். என் குட்டிகளை இளைய பெண்மானிடம் ஒப்படைத்துவிட்டு வந்துவிடுகிறேன். என்னை நம்புங்கள். என் குட்டிகள்மீது சத்தியம்'' என்றது. - 

மானின் வேண்டுகோளுக்கு வேடன் இசைந்தான். மான் தன் இருப்பிடம் நோக்கி ஓடியது. அந்த மானை எதிர்பார்த்து தூங்காமல் காத்துக்கொண்டிருந்தபோது, மற்றொரு பெண் மான் தண்ணீர் பருக வந்தது. அதைக்கொல்ல அம்பை எடுத்த போது வில்வ இலையும் தண்ணீரும் லிங்கத்தின்மீது விழுந்தன. அது இரண்டாவது சாமம் முடிவடையும் நேரம். ஓசையைக் கேட்டு நிமிர்ந்து பார்த்த மான் வேடன் தன்மீது குறிவைப்பதைக் கண்டு திகைத்து, ""வேடனே, என்னைக் கொல்லாதீர்கள். என் மூத்தாளைத் தேடி இங்குவந்தேன். அவள் குட்டிகள் என் பொறுப்பில் இருக்கின்றன. -

 அவற்றை அவளிடம் ஒப்படைத்துவிட்டு வந்துவிடுகிறேன். பிறகு நீங்கள் என்னைக் கொல்லலாம்'' என்றது. வேடன் அதற்கும் அனுமதி தந்தான். மூன்றாம் சாமம் முடியும் வேளையில் ஒரு ஆண் மான் நீர் பருக வந்தது. அதைக்கண்ட வேடன் வில்லை எடுத்தபோது, வில்வ இலையும் சிறிது நீரும் மரத்தின் கீழிருந்த சிவலிங்கத்தின்மீது விழுந்தன. - 

வேடன் தன்னைக் கொல்லப் போவதை அறிந்த ஆண் மான், "ஐயா, என் இரு மனைவிகளையும் குட்டிகளையும் தகுந்தவரிடம் ஒப்படைத்துவிட்டு வந்துவிடுகிறேன். பிறகு என்னைக் கொல்லுங்கள்'' என்று கெஞ்சிக் கேட்டது. அதற்கும் அனுமதியளித்த வேடன், அந்த மான்கள் ஒன்றின்மீது ஒன்று வைத்திருக்கும் பாசத்தை எண்ணி வியந்தபடி, மான்களை எதிர்பார்த்து உறங்காமல் மரத்தில் அமர்ந்திருந்தான். - 

தங்கள் இருப்பிடம் திரும்பிய மான்கள் நடந்த நிகழ்ச்சியைத் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டன. "வேடனுக்கு பலியாக நான் செல்கிறேன்'' என்று ஒரு மான் சொல்ல, "இல்லை, நான்தான் போவேன்'' என்றது இன்னொன்று. இப்படி மூன்று மான்களுமே விவாதித்தன. ஒருவர் உயிரைத் தியாகம் செய்து மற்ற இருவர் உயிர் வாழ்வதைவிட தங்கள் சத்தியத்தைக் காப்பாற்ற மூவருமே வேடனிடம் செல்வதென்று தீர்மானித்தன. - 

பெற்றோர்கள் பலியாகச் செல்லும்போது தாங்களும் உயிர்வாழ விரும்பவில்லை எனக்கூறி, குட்டி மான்களும் அவற்றைப் பின்தொடர்ந்து சென்றன. நான்காவது சாமம் முடிவடையும் நேரம். மான்கள் கூட்டமாக வருவதைக் கண்ட வேடன் மகிழ்ந்து வில்லையும் அம்பையும் எடுத்தபோது, சிவலிங்கத்தின்மீது தண்ணீரும் வில்வ இலையும் விழுந்தன. - 

நான்கு சாமங்களிலும் மரத்தின் கீழிருந்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்கிறோம் என்றோ, பூஜையின் மகிமை பற்றியோ அறியாமல் வேடன் பூஜை செய்திருக்கிறான். நித்திரையின்றி செய்த இந்த பூஜையின் காரணமாக சிவனருள் கிட்டி, அவனுக்கு ஞானம் பிறந்தது. வேடன் இருக்குமிடத்துக்கு வந்து சேர்ந்த மான்கள் அவனிடம், "எங்களைக் கொன்று உங்கள் குடும்பத்தினருடன் பசியாறி மகிழவேண்டும். நாங்கள் செய்த சத்தியத்தின்படி திரும்பி வந்திருக்கிறோம்'' என்றன. - 

ஞானம் பிறந்துவிட்டபின் வேடனுக்கு மான்களைக் கொல்ல மனம் வருமா? ஐந்தறிவு படைத்த அந்த மிருகங்களின் பண்புக்குமுன் ஆறறிவு படைத்த தான் தாழ்ந்துபோனதை எண்ணி வெட்கித் தலைகுனிந்தான். அந்த மான்களின் சத்தியம் தவறாத தர்மத்திற்கு அடிபணிவதாகக் கூறினான். அப்போது சிவபெருமான் அங்கு காட்சியளித்து, "வேடனே, உன்னையறியாமல் செய்திருந்தாலும், சிவராத்திரி விரதமிருந்த பலன் உன்னைச் சேரும். அதன் காரணமாக உனக்கு தரிசனம் தந்தேன். நீ வேண்டும் வரத்தைக் கேட்கலாம்'' என்றார். - 

ஈசனைப் பணிந்த வேடன், "ஐயனே, என் பாவங்களைப் போக்கியருள வேண்டும்'' என்றான். அவ்வாறே அருளிய சிவபெருமான், பல செல்வங்களையும் அவனுக்கு வழங்கி, ""வேடனே, இனி உன் பெயர் குகன் என்று வழங்கப்படும். ஸ்ரீமந் நாராயணன் சிறிது காலத்தில் இப்பூவுலகில் பிறந்து இங்கு வருவார். அவர் உன்னை சகோதரராக ஏற்றுக்கொள்வார்'' என்று ஸ்ரீராமர் அவதாரத்தை குறிப்பிட்டுக் கூறி, சிவராத்திரி விரதத்தின் மகிமையை விவரித்து மறைந்தார். - 

சிவ தரிசனம் கிட்டிய அந்த மான்களும் மிருக உடலை விடுத்து திவ்ய ரூபம் பெற்று சிவபதவி அடைந்தன. வியாதன் என்ற வேடன் பூஜித்த லிங்கம் வியாதேஸ்வரர் என்று பெயர் பெற்றதாக வரலாறு. - இத்தகைய சிறப்பு வாய்ந்த சிவராத்திரி வழிபாட்டினை பின் பற்றி எல்லா நலமும் அடைவோமாக...!. 

"ஈசன் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!"

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! - 
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி! போற்றி!
 - || ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

Tuesday, February 21, 2017

27 வகையான மனக் கஷ்டங்களும் அவற்றை போக்கும் எளிமையான பரிகார முறைகளும் :



27 வகையான மனக் கஷ்டங்களும் அவற்றை போக்கும் எளிமையான பரிகார முறைகளும் :


மனிதனாக பிறந்த எல்லோருக்கும் ஏதாவது ஒரு விதத்தில் ஒரு மனச் சஞ்சலம் அல்லது மனதளவில் ஏதாவது ஒரு கஷ்டம் இருந்து கொண்டே இருக்கும். அந்த கஷ்டத்தை ஒரு சில வழிபாட்டு முறைகளின் மூலம் விரட்டி விடலாம்.


1.வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில்கற்கண்டு போட்டு ,அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட,கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.


2.இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை [10.30-12.00 ]இராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து, . நெய்தீபம் ஏற்றி ,தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால்தம்பதிகள் ஒற்றுமையாக,அன்னியோன்யமாக வாழ்வார்கள்.


3.குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால் , அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது ரிஷிகள் சொல்லிய பரிகாரம்.


4.கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும்,மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும்வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும்.


5.ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல்,திருஷ்டி ,திருமண தடை விலகி நன்மை பெறலாம்.


6.ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம் குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.


7.வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால்,ஏதும் பூதகண சேஷ்டைகள் இருந்தால் நின்று விடும்.


8.சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட தொழில், வழக்குசாதகமாதல், பில்லி, சூனியம்,ஏவல்நீங்கும்.21செவ்வாய்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றிவழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.


9.கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.


10.ஜாதகப்படிசனிபகவானின்பாதிப்புகுறைய,திங்கட்கிழமை களில் சிவபெருமானுக்கு,பால் அபிசேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும். சனிக் கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில்தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும்நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும்.சிவன் கோவிலில் கால பைரவரையும்,விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரை யும்வழிபட செய்வினை தோஷம் நெருங்காது.


11.‎சிவன்‬ கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற,நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ள தாக ஒரு ஐதீகம் உண்டு.


12.பிரதோஷகாலத்தில், ரிஷபா ரூட மூர்த்தியாய்,மகேசனை தேவியுடன் வழிபடுவோர் 1000 அஸ்வமேத யாகங்களை செய்த பலனை பெறுவார்கள். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப் படும் தீபாரதனையை பார்த்தால்எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்.


13.மாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிசேகம் செய்தால், விரைவில் திருமணம் நடை பெறும்.


14.கலியுகத்தில் காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு அதுவும் இராகு காலத்தில்,செய்வது சிறந்தது. இராகு காலத்தில் கடைசி 1/2 மணி நேரமான அமிர்தகடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம்.நெய்விளக்கு ஏற்றவும் உகந்த நேரம். ஞாயிற்றுகிழமை மாலை 4.30-6.00 மணிக்குள் துர்க்கை க்கு விளக்கு ஏற்றி வழிபட நாம் வேண்டிய பிராத்தனை கள் நிறைவேறும்.


15.வெள்ளிக்கிழமை காலை 10.30-12.00 இராகு காலத்தில் துர்க்கைக்கு தாமரை தண்டு திரி போட்டு நெய்விளக்கு ஏற்றி வழிபட,தெய்வ குற்றம்,குடும்ப சாபம் நீங்கும். ஹஸ்த நட்சத்திரத்தன்று துர்க்கைக்குசிகப்பு பட்டு துணி சாற்றி, சிகப்பு தாமரையை பாதத்தில் வைத்து 27 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழ மாலை சாற்றி, குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்து வர உடனே திருமணம் நடை பெறும்.


16.சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு அருகம் புல் மாலைசாற்றி,அர்ச்சனை செய்து வழிபட ,சங்கடங்கள் தீரும். சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபடபிள்ளைகள் கல்வியில் முன்னேறுவார்கள்.


17.இரெட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று சந்தனக் காப்பு செய்து வழிபடகடன் பிரச்சனை தீரும்.


18.செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானுக்கு செவ்வாய் தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபடமூன்று மாதத்தில் வேலை கிடைக்கும்.


19.விபத்துகளில் இருந்து தப்பிக்க அவிட்ட நட்சத்திரத்தன்று முருகனுக்கு வேலில் எலுமிச்சை சொருகி அர்ச்சனை செய்யவும்.


20.ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி,வில்வம் உள்ள இடத்தில் இருந்து சுமார் 10கி.மி தூரத்திற்கு செய்வினை அணுகாது.


21.பஞ்சகவ்ய கலவையை வாரம் ஒரு முறை வீடுகளில் தெளிக்க ,தோஷம், தீட்டு நீங்கி, லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும்.பால், தயிர், கோமூத்திரம், சாணம் கலந்தது பஞ்சகவ்ய கலவை.


22.புத்திர பாக்கியம் இல்லாதோர் 6 தேய்பிறை அஷ்டமிகளி ல் காலபைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.


23.வியாழக்கிழமைகளில் ஒரு நேரம் விரதம் இருந்து மாலையில் ஆலய தட்சணா மூர்த்திக்கு தொடர்ந்து நெய்விளக்கு ஏற்றி வர ,விரதம் ஏற்ற 192 நாட்களில் கருத்தரிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.


24.பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை சுற்றி வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபடசர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.


25.வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல், பூஜை நடக்காமலிருக்கும் கோவில்களில் பூஜை நடக்க உதவுதல்,அனாதைப் பிணங்களின் தகனத்திற்கு உதவுதல்- ஆகிய மூன்றும் செய்தால் அசுவமேத யாகம் செய்ததற்குச் சமம்.


26.தொழில் தடை, கணவன்- மனைவிக்கு கருத்து வேறுபாடு நீங்க, வாழ்வில் நலம் பெற, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி பெற, -என்று நல்ல காரியங்கள் நடைபெற பெளர்ணமி தோறும் நடைபெறும் சத்திய நாராயணா பூஜையில் கலந்து கொள்வது நற்பலன் களைத் தரும்.


27.எத்தகைய கிரக தோசமானாலும் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும். வாழை தண்டு திரியினால் வீட்டில் தீபம் ஏற்றினால் குலதெய்வ குற்றமும், குலதெய்வ சாபமும் நீங்கும்.

Thursday, February 16, 2017



நம் உடலுக்குள் ஜீவநதி ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் பெயர் ரத்தம். ரத்த ஓட்டம்தான் நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. உடலில் உள்ள கோடிக்கணக்கான செல்களுக்கு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களைச் சுமந்துசென்று அவற்றை உயிர்ப்புடனும் துடிப்புடனும் வைத்திருக்கிறது. நோய் பாதிப்பில் இருந்து உடலைக் காக்கும் வெள்ளை அணுக்களைக் கொண்டிருக்கிறது. உறுப்புகளுக்கு இடையேயான தொடர்பை மேம்படுத்தி, உடல் சுழற்சி எனும் அடிப்படையான விஷயத்துக்கு அச்சாணியாக இருக்கிறது. இந்த ரத்த ஓட்டத்தைச் சீராக வைத்திருக்கும் முக்கியமான 15 உணவுகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

பூண்டு

நம் மரபில் மிகவும் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கும் ஒரு செயல்படு உணவு (Functional food) பூண்டு. இதில் உள்ள ‘அல்லிசின்’ (Allicin) என்ற வேதிப்பொருள், ரத்த ஓட்டத்தைச் சீராக வைத்திருப்பதோடு, உடலில் கொழுப்புச்சத்தைக் கட்டுப்படுத்தி, இதயம், மூளை மற்றும் செரிமான மண்டலத்தையும் பாதுகாக்கிறது.

கேரட்

கேரட்டில் உள்ள பீட்டா ‘கரோட்டின்’ நம் ரத்தத்தைச் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், ரத்த உற்பத்தியிலும், சிவப்பு அணுக்கள் உற்பத்தியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. முக்கியமாக, புற்றுநோய்க் கிருமிகள் நம்மை அண்டாமல் பார்த்துக்கொள்கிறது.

மீன்கள், இறால், நண்டு

சிலவகை மீன்களில் ஒமேகா 3 மிகுந்துள்ளது. இது, உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி, உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. இதனால், உடலின் ரத்த ஓட்டம் சீராகிறது. இதயம், மூளை இரண்டும் வலுவடைகின்றன. மேலும், அழிந்துபோன செல்களால் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க, இதில் உள்ள துத்தநாகம் உதவுகிறது. எனவே, வாரம் ஒருநாள் இவற்றில் ஒன்றைச் சாப்பிடலாம்.

சின்ன வெங்காயம்

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த சின்ன வெங்காயம், ரத்தத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, நோய்க்கிருமித் தாக்குதலைத் தடுக்கிறது. மேம்பட்ட உடல் சுழற்சிக்கு எந்தவித இடர்ப்பாடும் இல்லாமல் நம்மைக் காக்கிறது.

முட்டைகோஸ்

குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம்பெற, முட்டைகோஸில் உள்ள ‘குளூட்டோமைன்’ என்ற அமிலம் உதவுகிறது. ரத்தம் சுத்திகரிக்க, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது.

கோதுமை

கோதுமையில் மாவுச்சத்து சற்றுக் குறைவு என்பதால், உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வதைத் தடுத்து, ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. நரம்பு மண்டலமும் மூளையும் நன்கு செயல்படவும், புதிய செல்கள் உற்பத்திக்கும் உதவுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. தைமஸ் சுரப்பி விரைந்து செயல்பட, முழுக் கோதுமையில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் துணைசெய்கிறது.

ஆரஞ்சு

சிட்ரிக் அமிலம், வைட்டமின் சி மிகுந்த இந்தப் பழம், ரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. காற்று மற்றும் நீர் மூலமாகப் பரவும் நோய்க் கிருமிகளிடம் இருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது.

நட்ஸ்

பாதாம் பருப்பு, வேர்க்கடலை உள்ளிட்ட நட்ஸில் உள்ள வைட்டமின் இ, ரத்த வெள்ளை அணுக்கள் சிறப்பாகச் செயல்பட உதவுகிறது. இதனால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

கீரைகள்

கீரைகளில் பல்வேறு வகையான வைட்டமின்கள், நுண்ணூட்டச்சத்துகள், தாதுஉப்புக்கள் உள்ளன. இவை அனைத்தும் உடல் எடையைக் கட்டுப்படுத்துவதுடன், உடலில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களை அதிகரிக்கவும் உதவுகின்றன. மேலும், செரிமான மண்டலத்தைச் சரியாக இயங்கச்செய்து ஆரோக்கியத்தைக் காக்கின்றன.

தேநீர்

தேநீரில் உள்ள மக்னீசியம், நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ராணுவ வீரர்களைப் போன்று செயல்படுகிறது. சூடான ஒரு கப் தேநீர் அருந்துவதால், நோய்த் தொற்றைத் தடுக்கலாம். மூளையைச் சுறுசுறுப்பாக்கி, நம்மைத் துடிப்புடன் வைத்திருக்கவும் உதவுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை பால் சேர்க்காத தேநீர் பருகுவதில் தவறு இல்லை.

மாதுளை

மாதுளைச்சாறு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கிறது. ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொழுப்பைக் குறைக்கின்றன. ரத்தம் உறைதல் பிரச்னையில் இருந்து காக்கின்றன. தொடர்ந்து மாதுளை உண்பதன் மூலம், கொஞ்சம் கொஞ்சமாக ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, ரத்தத்தின் ஆக்சிஜன் அளவை மேம்படுத்தலாம்.

இஞ்சி

இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால்(Gingerol), ரத்தத்தைச் சுத்திகரிக்கிறது. ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது. செரிமானத்தைச் சீராக்கி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

நன்னாரி வேர்

மூலிகைகளில் ஒன்றான நன்னாரி வேர், உடலில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் சிறந்தது. மேலும், இந்த வேரில் ஆன்டிசெப்டிக் பொருள் நிறைவாக உள்ளது. இது, ரத்தத்தில் இருக்கும் கிருமிகளை அழித்துச், சுத்தமாக வைக்கிறது.

பீட்ரூட்

இரும்புச்சத்து நிறைவாக உள்ளது. ரத்த வெள்ளை அணுக்கள் உற்பத்திக்கான புரதமும் உள்ளது. பீட்ரூட்டின் மேல் இருக்கும் தண்டில் வைட்டமின் ஏ-வும், அதன் வேர்களில் வைட்டமின் சி-யும் நிறைவாக உள்ளதால், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ரத்தம் சுத்திகரிக்கப்படும்.

கற்றாழை

கற்றாழைச் சோற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. கற்றாழை, உடலுக்குக் குளிர்ச்சியைத் தந்து, உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. ரத்த நாளங்களை ஆரோக்கியமாக்குகிறது. இதனால், ரத்த ஓட்டம் சீராகிறது.